×

கோர்ட்டில் இருந்து கைதி தப்பி ஓட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மேல சண்முகபுரம், வண்ணார் முதல் தெருவைச் சேர்ந்த அற்புதராஜ் மகன் செல்வ சதீஷ் (எ) சூப்பி (23). இவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பேரூரணியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கு விசாரணைக்கு சிறையில் இருந்த செல்வ சதீஷை ஆயுதப்படை போலீசார் 4 பேர் பாதுகாப்புடன் தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வந்தனர். அப்போது, சிறுநீர் கழிக்க வேண்டும் என செல்வசதீஷ் கூறியதை அடுத்து, நீதிமன்ற வளாத்தில் இருந்த கழிப்பறைக்கு அனுப்பிவிட்டு வாசலில் காத்திருந்தனர். வெகு நேரமாகியும் கைதி செல்வசதீஷ் வெளியே வராததால், போலீசார் கழிப்பறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு கம்பி இல்லாத ஜன்னல் கண்ணாடியை உடைத்து அங்கிருந்து பின்புறமாக குதித்து செல்வ சதீஷ் தப்பிச் சென்றது தெரியவந்தது.

The post கோர்ட்டில் இருந்து கைதி தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Selva Sathish (A) Soupy ,Aumuraraj ,Vannar First Street ,Mela Shanmugapuram ,Perurani ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பலி